என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள்"
- மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 59).
சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
தஞ்சை மூலிகைப் பண்ணை ரோட்டில் வந்த போது சாலை யில் மாடு ஒன்று குறுக்கே புகுந்தது.
மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
இதில் கட்டு ப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வன் பலத்த காயமடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
- அவர்களிடமிருந்து 130 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே நாகலூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக வரஞ்சரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற னர். அப்போது அங்கு சந்தேகப்படு ம்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் சங்கராபுரம் பொய் குணம் ரோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 30) மற்றும் சங்கராபுரம் அருகே புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வல்லரசு (23) என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 130 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் வல்லரசு ஆகியோரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- மெயின் ரோட்டை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் தேவராஜ் மீது மோதியது
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற நபர் யார் என விசாரணை
தக்கலை :
தக்கலை அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63). இவர் இன்று காலை டீ குடிக்க தக்கலை பனவிளை அருகில் உள்ள டீ கடைக்கு சென்று விட்டு திரும்பினார். மெயின் ரோட்டை கடக்கும் போது தக்கலையில் இருந்து அழகியமண்டபம் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் தேவராஜ் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர் பரிசோதனை செய்து விட்டு தேவராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது சம்மந்தமாக இவரது மகன் ஏவின் ராஜா ஷாஜி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்
- மோட்டார் சைக்கிளில் அருகில் நின்றிருந்த குட்டி மற்றும் சிவகாசி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
- திடீரென மோட்டார் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் சிவகாசி, குட்டி. இவர்கள் வேட்டைக்காக வெடிமருந்தை தங்களுடைய மோட்டார் சைக்கிளில் வைத்திருந்தனர். இந்த வண்டியை இன்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள ஒரு மளிகை கடையின் முன்பு நிறுத்தி இருந்தனர். திடீரென இதிலிருந்த வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் மோட்டார் சைக்கிள் மற்றும் மளிகை கடையிலிருந்த கண்ணாடி, திண்பண்டங்கள் சேதமடைந்தன. மோட்டார் சைக்கிளில் அருகில் நின்றிருந்த குட்டி மற்றும் சிவகாசி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திடீரென மோட்டார் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70).
- படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70). இவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு செல்வதற்காக கோழிக்கட்டானூர் கணக்குப்பட்டி பிரிவு ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார்சைக்கிள் கோவிந்தம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த கோவிந்தம்மாள் நேற்று காலை உயிரிழந்தார். இது பற்றி கோவிந்தம்மாளின் மகன் சக்திவேல் (38) கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது.
- திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள ஆதியூர் பிரிவில் மளிகை கடை உள்ளது. சம்பவத்தன்று இங்கு மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருந்தது. இதேபோல் பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது. இந்த 2 குற்றத்திற்கும் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஊத்துக்குளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஊத்துக்குளி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த அகமது நசீர் (வயது 26), யாசர் அராபத் (வயது 24) ஆகிய 2 பேர் மேற்கண்ட திருட்டு வழக்கில் தொடர்பு உடையவர்கள் என்பதை ேபாலீசார் கண்டு பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள், திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறிக்கும் மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
- ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள தெருக்களில் நடந்த இந்த சம்பவங்கள் அந்த பகுதியினரை அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தெருக்க ளில் நடந்து செல்லும் பெண்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து நகை பறித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. நேற்று அருகருகே உள்ள பகுதிகளில் 2 பெண்க ளிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.
ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி தெருவை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 43). இவரது கணவர் கோவில்பூசாரி. நேற்று இரவு அக்ரகார தெருவில் உறவினர் ரெங்கநாயகி மற்றும் மகள் கார்த்தீஸ்வரி யுடன் முத்துமாரி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது.அதற்கு வழி விடுவதற்காக முத்துமாரி ஒதுங்கி நின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மர்ம நபர்கள் அவ ரது கழுத்தில் கிடந்த செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்ற னர்.
இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் முத்துமாரி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
அதேபோல் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த வர் வேலம்மாள் (50). இவர் அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 2 மர்ம நபர்கள்திடீரென வேலம்மாள் கழுத்தில் கிடந்த செயினை இழுத்த னர்.
சுதாரித்து கொண்ட அவர் செயினை இறுக்கி பிடித்து கொண்டார். இத னால் பாதி செயினை மட்டும் பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள தெருக்களில் நடந்த இந்த சம்பவங்கள் அந்த பகுதியினரை அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முழுமை யாக கைது செய்யப்படாமல் உள்ளனர். இதனால் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி சர்வ சாதாரண மாக நடைபெறுகின்றன. போலீசார் உரிய நட வடிக்கை எடுத்து குற்ற வாளிகளை கைது செய்து மேலும் நகை பறிப்பு சம்ப வங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றனர்.
- அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- அர்ச்சுனனின் உடல் இன்று குழித்துறை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது
திருவட்டார் :
குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 54). ரப்பர்பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார் இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் ஒரு மகளும் மகனும் உள்ளனர் மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்.
நேற்று மாலை அர்ச்சுனன் திருநந்திகரையில் இருந்து குலசேகரம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வரும் போது பேச்சிப்பாறை சேனங்கோடு பகுதியை சேர்ந்த விஜோ ஜோசப்பு என்ற பள்ளி மாணவன் தனது இரு சக்கர வாகனத்தில் குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறை நோக்கி வந்தான். இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன.
இதில் அர்ச்சுனன் தூக்கி வீசப்பட்டார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இரவு அர்ச்சுனன் இறந்து விட்டார்.
இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விஜோ ஜோசப் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். அர்ச்சுனனின் உடல் இன்று குழித்துறை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
- போலீசார் அதிரடி நடவடிக்கை
- தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
தக்கலை :
தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று மாலை பழைய பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமன்பறம்பு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 29) மற்றும் சடையமங்கலம் பகுதியை சேர்ந்த சிவகுமார் (45) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வந்தனர். இருவரும் போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சிக்கவும் அவர்களை போலீசார் பிடித்து தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
பரிசோதனையில் இவர்கள் இருவரும் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றது உறுதியானது. பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்துள்ளது.
- மோட்டார் சைக்கிள் திருடப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கு கேற்றாற் போல் வாகனப் பெருக்கமும் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேவ கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீட்டின் முன்பும் மற்றும் வணிக வளாகங்கள் முன்பும் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு வருகிறது.இது தொடர்பாக போலீஸ் நிலை யத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தேவகோட்டையில் முக்கிய இடங்களான ஆண்டவர் செட், பேருந்து நிலையம், வங்கி, மருத்துவ மனை, வணிக வளாகங்க ளில் வருபவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை வாச லில் வைத்து விட்டு செல் கின்றனர். வேலை முடித்து விட்டு வெளியே வந்து பார்க்கும்போது அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.
இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மோட்டர் சைக்கிளை வெளியிட ங்களில் நிறுத்த அச்சமடை கின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர் பாக தேவகோட்டை போலீ சுக்கு புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவு களை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், நகர் இன்ஸ்பெக்டர் சரவ ணன், சப் இன்ஸ்பெக்டர் அன்சாரி உசேன், நமச்சிவா யம் தலைமையிலான போலீ சார் ஆய்வு செய்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக் கிளை திருடிச் செல்வது கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து மோட்டார் சைக்கிளை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்
- இருசக்கர வாகனத்தில் களியக்காவிளையில் இருந்து நித்திரவிளை நோக்கி சென்றார்.
- படுகாயம் அடைந்த ரவியை அருகில் நின்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கொல்லங்கோடு :
கொல்லங்கோடு அருகே உள்ள எஸ்.டி. மாங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 46). இவர் நேற்று சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சாத்தங்கோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் களியக்காவிளையில் இருந்து நித்திரவிளை நோக்கி சென்றார். எதிர்பாராத விதமாக வாகனம் ரவி மீது பலமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ரவியை அருகில் நின்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது சம்பந்தமாக ரவி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.14 ஆயிரத்தை தனது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவருக்குள் வைக்குமாறு கூறினாா்.
- போலீசார் தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனா்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் நாஞ்சி க்கோட்டை சாலையில் புதிதாகக் கட்டடப்படும் ஆஸ்பத்திரிக்கு தடையில்லாச் சான்று பெற அதன் உரிமையாளா் அரண்மனை வளாகத்திலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாவட்ட உதவி அலுவலா் முனியாண்டியிடம் (வயது 56) கடந்த செப்டம்பா் 13 ஆம் தேதி விண்ணப்பித்தாா்.
அப்போது ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்ட முனியாண்டி, பின்னா் அதில் ரூ. 1000 குறைத்துக் கொண்டு ரூ. 14 ஆயிரத்தை பழைய பஸ் நிலையத்துக்கு வந்து தருமாறு கூறினாா்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மருத்துவமனை உரிமையாளா் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவினரிடம் புகாா் செய்தாா்.
இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் துணைக் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், பத்மாவதி ஆகியோர் தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனா்.
அப்போது பழைய பஸ் நிலையத்துக்கு வந்த முனியாண்டி கைப்பேசி மூலம் மருத்துவமனை உரிமையாளரை வரவழைத்து ரூ. 14 ஆயிரத்தை தனது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவருக்குள் வைக்கு மாறு கூறினாா்.
அதன்படி உரிமையாளா் பணத்தை வைத்ததும், புறப்பட முயன்ற முனியா ண்டியை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் முனியாண்டியை அரண்மனை வளாகத்தில் உள்ள தீயணைப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து முனியாண்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்